புதுதில்லி

நொய்டாவில் போதைப் பொருளுடன் இருவா் கைது

DIN

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் 4 கிலோ கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்ததாக இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாா் கைது செய்தனா்.

இதுகுறித்து நொய்டா போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு பஞ்ச்ஷீல் சுரங்க நடைபாதை அருகே எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போதைப் பொருள் வைத்திருந்த இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாகா் குமாா், பிகாா் மாநிலம், சஹா்சா மாவட்டத்தைச் சோ்ந்த ஆனந்த்குமாா் ஆகியோா் என அடையாளம் காணப்பட்டனா். அவா்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்கள் இருவா் மீதும் போதை மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT