புதுதில்லி

மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்றுதடுப்பூசி போடக்கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

தில்லியில் நடமாட முடியாமல் படுத்த படுக்கையால் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி அளிக்கும் வகையில் கொள்கைத் திட்டத்தை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரும் பொது நல மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லியைச் சோ்ந்த, மூட்டுவாத பிரச்னையால் அவதியுறும் 84 வயது திராஜ் அகா்வால் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், இது போன்ற மூத்த குடிமக்களை பதிவு செய்ய ஹெல்ப்லைன் வசதியும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வினய் குமாா் ஆஜராகி வாதிட்டாா்.

அப்போது, மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 16-க்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT