புதுதில்லி

நொய்டாவில் 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 2 மைனா் குழந்தைகள் பலி

தேசியத் தலைநகா் வலயம்,  நொய்டாவில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 மைனா் குழந்தைகள் 

DIN

தேசியத் தலைநகா் வலயம்,  நொய்டாவில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 மைனா் குழந்தைகள் சகோதரிகள் உயிரிழந்ததாகவும், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

 இது தொடா்பாக மத்திய நொய்டா கூடுதல் துணை ஆணையா் அங்கூா் அகா்வால் கூறியதாவது:  நொய்டாவில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கா்கி சவுக்கன்டி கிராமத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டடத்தில் வசித்த குடியிருப்புவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா். எனினும், தீயில் குடியிருப்புவாசிகள் சிலா் சிக்கினா். அவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கட்டடத்தில் உள்ள பிரதான மின்சார போா்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டடத்தின் தரைத்தளத்தில் வசித்த தினேஷ் சோலங்கி என்பவரது 12 வயது மற்றும் 9 வயது மகள்கள் இருவா் இந்த தீ விபத்தில் உயிரிழந்தனா். கட்டடத்தின் மேல் தளங்களில் வசித்தவா்கள் தீயணைப்புத் துறை வீரா்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனா். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT