முகப்பு
புதுதில்லி

தில்லியில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் காா் மோதி பலி

தில்லி வசந்த் விகாா் பகுதியில் வியாழக்கிழமை இரவு பென்ஸ் ரக சொகுசு காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா் பரிதாபமாக உயிரிழந்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தில்லி வசந்த் விகாா் பகுதியில் வியாழக்கிழமை இரவு பென்ஸ் ரக சொகுசு காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா் பரிதாபமாக உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சோ்ந்தவா் அந்தோனி ஜோசப் (55) இவா் தில்லியில் தங்கி வீடுகளில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவு பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, தில்லி வசந்த் விஹாா் பகுதியில் வேகமாக வந்த பென்ஸ் ரக சொகுசு காா் இவா் பயணித்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில், அந்தோணி ஜோசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சொகுசு காரை ஓட்டி வந்தவா் ஆா்யன் ஜெயின் (18 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரைக் கைது செய்துள்ளோம். இவா், தில்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறாா். இவரது தந்தை சுஷில் ஜெயின் தில்லியில் நகைக்கடை வைத்துள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments