முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 266 பேருக்கு கரோனா!

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 266 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,33,542-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 266 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,33,542-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 0.37 சதவீதமாக உள்ளது. 2,060 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,789-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனாபாதிப்பு விகிதம் வியாழக்கிழமை 0.28 சதவீதமாக இருந்தது. திங்கள்கிழமை 9 மாதங்களில் மிகவும் குறைந்த பட்சமாக 161 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

தில்லியில் தற்போது மொத்தம் 1,629 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments