கூகுள் பே-வில் அறிமுகமான பாக்கெட்மணி ! பரவிய புரளிகளில் உண்மை இருக்கிறதா?
கூகுள் பே செயலில் பாக்கெட்மணி என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பற்றி..
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கான முன்னணி செயலியாக இருக்கும் கூகுள் பே, பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பாக்கெட் மணியை சரியாகத்தான் செலவிடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்கக் கொண்டு வந்திருப்பதுதான் பாக்கெட் மணி என்ற வசதி.
ஜிபே-வின் இந்த புதிய வசதி எவ்வாறு செயல்படும், அதன் பயன்கள் என்னென்ன, பெற்றோர் இதனை எவ்வாறு சிறப்பாக கையாளலாம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகும் முன்பே, இது பற்றி பல புரளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
கூகுள் பே-வானது யுபிஐ சர்க்கிள் அமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த வசதி, பெற்றோர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்காமலேயே, தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது தங்களை சார்ந்திருப்பவர்களுக்கோ நேரடியாகப் பணம் அனுப்பவும், அதே நேரத்தில் அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்கவும் வழி வகை செய்கிறது.
Advertisement