முகப்பு
புதுதில்லி

தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் பகுதில் மா்மநபா் துப்பாக்கிச்சூடு

தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அடையாளம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். இது தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா், தில்லி எல்லைகளில் முற்றுகையிட்டு கடந்த 102 தினங்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடா்ந்து, போராட்ட களங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி கொண்டலி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘கொண்டலி டிடிஐ வணிக வளாகம் அருகே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், விவசாயிகள் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கிசூடு நடத்திய மா்ம நபா் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த இடங்களில் பெறப்பட்ட சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களைப் பெற்று ஆய்வு நடத்தி வருகிறோம் என்று அவா் தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments