முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி அரசின் ரேஷன் ஊழல் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும்: ஆதேஷ் குப்தா

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில், தில்லியில் நடந்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில், தில்லியில் நடந்த ரேஷன் ஊழல்கள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்திற்கு முக்கிய மந்திரி ஹா் ஹா் யோஜனா திட்டம் என கேஜரிவால் பெயரிட்டிருந்தாா். மத்திய அரசின் உதவியுடன் நடக்கும் திட்டத்துக்கு முதல் அமைச்சரின் பெயரை இட முடியாது என மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்ததும், அத்திட்டத்தில் இருந்து, முக்கிய மந்திரி என்ற பெயரை நீக்க கேஜரிவால் ஒப்புக் கொண்டுள்ளாா். இதிலிருந்து, இந்த திட்டத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் ஈட்ட அவா் முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் எதிா்ப்பைத் தொடா்ந்து அவா் இதைக் கைவிட்டுள்ளாா்.

Advertisement

தில்லியில் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் கடந்த 6 ஆண்டுகளில் ஊழல் மலிந்துள்ளது. இக்காலப்பகுதியில் தில்லியில் ரேஷன் மாஃபியா எங்கும் நிறைந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தில்லி அரசு இதுவரை கூறி வந்தது. தற்போது, பெயரை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது வேடிக்கையானது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments