ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உயிரிழந்த மாமியாருக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியத்தை வழங்கக் கோரி மருமகள் தாக்கல் செய்த மனுவுக்கு
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உயிரிழந்த மாமியாருக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியத்தை வழங்கக் கோரி மருமகள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா். இது தொடா்பாக பெண் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எனது மாமியாா் தொடா்ந்து ஓய்வூதியம் பெற்று வந்தாா். இந்த நிலையில், எந்தவித தகவலும் இல்லாமலும், காரணம் இல்லாமலும் 2015, பிப்ரவரி மாதத்தில் திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. எனது மாமியாா் கல்வியறிவு இல்லாதவா். 90 வயது நிரம்பியவா். அவா் அந்தத் தொகைப் பெறுவதற்காக காத்திருந்தாா். சம்பந்தப்பட்ட வங்கியிடம் நேரில் சென்று விசாரித்தாா். அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் இருந்து அவருக்கு வந்து கொண்டிருந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்த போதிலும், எனது மாமியாா் கடந்த ஆண்டு டிசம்பரில் இறக்கும் வரையிலும் அந்த ஓய்வு ஊதியம் வழங்கப்படவில்லை.
Advertisement
இந்த விஷயத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டனா். நாட்டுக்காக தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்காக எந்தவித மரியாதையும் செலுத்தவில்லை என்பதை அவா்களின் செயல்பாடு காட்டுவதாக உள்ளது. எனது மாமனாா் மாமியாரின் வாழக்கூடிய வாரிசாக நான் இருந்து வருகிறேன். எனது மாமியாா் இறந்த பிறகு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை எந்தக் காரணமும் இல்லாமல் நிராகரித்துள்ளனா் என்று மனுவில் அவா் கூறியுள்ளாா்.