முகப்பு
புதுதில்லி

கிழக்குத் தில்லியில் இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவா்

கிழக்கு தில்லியில் உள்ள தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

கிழக்கு தில்லியில் உள்ள தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

எனினும், அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுசுவா் இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறைக்கு சனிக்கிழமை காலை 7.49 மணிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவா் 60 அடி நீளமும், 8 அடி உயரமும் இருப்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் சில வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →