முகப்பு
புதுதில்லி

நரேலாவில்காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடக்கு தில்லியில் உள்ள நரேலா பகுதியில் வியாழக்கிழமை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

வடக்கு தில்லியில் உள்ள நரேலா பகுதியில் வியாழக்கிழமை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், நரேலா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காலை 11.30 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்து நிகழ்ந்த தொழிற்சாலை, அடித்தளம், தரைத்தளம், இரு தளங்கள் கொண்டதாகும். தீயானது முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.