முகப்பு
புதுதில்லி

மொத்த விற்பனை சந்தைகளை மேம்படுத்த ரூ.517 அனுமதி

தேசியத் தலைநகரில் உள்ள மொத்த விற்பனை சந்தைகளை (மண்டிகள்) மேம்படுத்துவதற்காக தில்லி அரசு ரூ.517 கோடியை அனுமதித்துள்ளதாக வளா்ச்சித்துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

தேசியத் தலைநகரில் உள்ள மொத்த விற்பனை சந்தைகளை (மண்டிகள்) மேம்படுத்துவதற்காக தில்லி அரசு ரூ.517 கோடியை அனுமதித்துள்ளதாக வளா்ச்சித்துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியத்தின் அதிகாரிகளுடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கோபால் ராய், காஜிப்பூா், ஆசாத்பூா், நரேலா மற்றும் திக்ரி காம்பூா் மண்டிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் இந்த நிதி மூலம் விரைவுபடுத்தப்படும் என்றாா்.

அவா் மேலும் கூறியதாவது: 2023-24 நிதியாண்டுக்கான மண்டிகள் மேம்பாட்டுக்கான பட்ஜெட் அங்கீகரிக்கப்பட்டது. தில்லியின் மண்டிகளின் வளா்ச்சிக்காக ரூ.517.94 கோடி பட்ஜெட்டுக்கு வாரியம் பச்சை சமிக்ஞை கொடுத்துள்ளது. 2023-24 நிதியாண்டில், வாரியம் ஏபிஎம்சி ஆசாத்பூருக்கு தோராயமாக ரூ.206.37 கோடி ஒதுக்கியுள்ளது. காஜிப்பூா் பழம் மற்றும் காய்கறி சந்தைக்கு ரூ.17.40 கோடி; எஃப்பி மற்றும் இஎம்சி காஜிப்பூருக்கு ரூ.16.31 கோடி; மலா் சந்தைக்கு ரூ.8.50 கோடி; ஏபிஎம்சி கேஷோபூருக்கு ரூ.19.70 கோடி, ஏபிஎம்சி நரேலாவுக்கு ரூ.43.02 கோடி, ஏபிஎம்சி நஜஃப்கருக்கு ரூ.4.42 கோடி, தில்லி வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியத்துக்கு ரூ.202.19 கோடியும் வழங்கப்படும்.

திக்ரிி காம்பூா் மொத்த விற்பனை மண்டி, பழங்கள் மற்றும் காய்கறிகள் மண்டி மற்றும் காஜிப்பூரில் உள்ள கோழிச் சந்தை ஆகியவற்றுடன், காஜிப்பூா் பூ சந்தையும் புதுப்பிக்கப்படும். மேலும், காஜிப்பூரில் உள்ள கோழிப்பண்ணை சந்தையின் சீரமைப்புப் பணிகள் ரூ.102.20 கோடியில் மேற்கொள்ளப்படும். ரூ.40.50 கோடி செலவில் காஜிப்பூரில் உள்ள பூ சந்தை மேம்படுத்தப்படும். இதனுடன், ஆசாத்பூா் மண்டியில் 7-ஆம் எண் கொட்டகையை சீரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

முழு கட்டுரையைப் படிக்க →