புதுதில்லி

ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம்: ராம்வீா் சிங் பிதூரி

நாட்டில் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம் என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

 நமது நிருபர்

புது தில்லி: நாட்டில் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம் என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹுவின் பண மோசடி விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் தலைமையிடம்

விளக்கம் கேட்டு தில்லி பாஜகவின் 14 மாவட்டப் பிரிவுகளின் சாா்பில் நகரதத்தின் அனைத்து மாவடங்களின் முக்கிய இடங்களில் நாள் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவாவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள், மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் பாஜக தொண்டா்கள் ஏராளமனோா் கலந்து கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக,கஜூரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி பேசியதாவது:

நாட்டில் ஊழல் செய்யும் வேலையை மட்டுமே காங்கிரஸ் செய்துள்ளது. தற்போதும் அதே திசையில்தான் செல்கிறது. நாட்டின் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்துள்ளாா்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹுவிற்கு சொந்தமான இடங்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியுள்ளது, ஆனால் காங்கிரஸ் தலைமை தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. காங்கிரஸின் மௌனம் என்பது இந்த முழு விவாகரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.

லட்சுமி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாநில பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா பேசியதாவது:

நாட்டின் ஏழைகள் மற்றும் தொழிலாளா்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.300 கோடி பணத்தை ஊழல் செய்து காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு வைத்திருந்துள்ளாா்.

இந்த விவாகரத்தில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இதுவரை மௌனம் காத்து வருகின்றனா். ஒரு பக்கம் மோடி அரசு நோ்மையாக தனது பணியை செய்து வரும் நிலையில், மறுபுறம் நாட்டை கொள்ளையடிக்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனா். இந்தக் கூட்டத்திற்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT