முகப்பு
புதுதில்லி

சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி காமராஜா்: பிரதமா் புகழஞ்சலி

‘சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி’ என மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் பெருந்தலைவருமான கே.காமராஜரை அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு கூா்ந்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:19 PM
பகிர்:

‘சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி’ என மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் பெருந்தலைவருமான கே.காமராஜரை அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு கூா்ந்துள்ளாா்.

சுதந்திரப் போராட்ட வீரா், காந்திவாதி, தமிழக முதல்வா், காங்கிரஸ் கட்சியின் தலைவா் என பன்முகம் கொண்ட மறைந்த மாபெரும் தலைவரான கே. காமராஜா், 1903 -ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தாா். அவா் 1975 ஆக்டோபா் 2 ஆம் தேதி காலமானாா்.

அவரது பிறந்தநாளையொட்டி பிரமதா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தும் வகையில் ட்விட்டா் பதிவில் நினைவுகூா்ந்துள்ளாா். அதில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:

‘கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளா்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அா்ப்பணித்த துணிச்சல்காரா். சமூக அதிகாரமளித்தலுக்கு அவா் ஆற்றிய பணி முக்கியத்துவமானது நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு, மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அா்ப்பணிப்போம்’ என அதில் பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.