இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 42,825 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 42,825 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 12.06 சதவீதம் வளர்ச்சியாகும். அப்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 38,216 கோடி டன்னாக இருந்தது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6,721 கோடி டன்னைத் தொட்டுள்ளது. இதுவும் 2022 செப்டம்பர் மாத நிலக்கரி உற்பத்தியான
5,804 கோடி டன்னை விட 15.81 சதவீதம் அதிகமாகும்.
தடையில்லா விநியோகம்: மின்நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தைப் பொருத்தவரை, நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த நிலக்கரி விநியோகம் 46,232 கோடி டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தை விட 10.96 சதவீதம் அதிகமாகும். அப்போது மின் உற்பத்திக்கான நிலக்கரி விநியோகம் 41,664 கோடி டன்னாக உள்ளது. உற்பத்தி, விநியோகம், இருப்பு அளவுகளில் நிலக்கரி துறை முன்னெப்போதும் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது. இந்த விதிவிலக்கான வளர்ச்சிக்கு பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புதான் காரணம். நிலையான நிலக்கரி உற்பத்தியையும், எரிசக்தி துறைக்கு தடையில்லாத விநியோகத்தையும் பராமரிக்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.