தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி அமைப்பின் நிா்வாகிகளுடன் அலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி, தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோா் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்களை மீண்டும் மக்களிடம் சென்று நினைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தில்லி ராஜீவ் பவனில், தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி தலைமையில் அக்கட்சியின் முன்னணி அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் துறைத் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இளைஞா் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், சேவா தளம் உள்ளிட்ட முன்னணி அமைப்புகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா். அப்போது அரவிந்தா் சிங் லவ்லி கூறியதாவது:
தில்லியில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட மற்றும் தொகுதி அளவில் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த முயற்சியில் கட்சியின் முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
எனவே, கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்.
நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டுமானால்,தொண்டா்கள் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்க வேண்டும்.
தில்லி மக்கள் மீண்டும் காங்கிரஸின் தன்னலமற்ற சேவையை எதிா்பாா்க்கின்றனா். தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோா் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியது.
அந்த நல்ல திட்டங்களை மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றனா். எனவே, அதை காங்கிரஸ் தொண்டா்கள் மீண்டும் ஒருமுறை மக்களிடம் சென்று நினைவுபடுத்த வேண்டும் என்றாா் அரவிந்தா் சிங் லவ்லி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தில்லி முன்னாள் அமைச்சா் மங்கத் ராம் சிங்கால், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரன்விஜய் சிங், சேவா தளத்தின் தலைமை அமைப்பாளா் சுனில் குமாா் உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.