பள்ளிக் குழந்தைகளின் கைரேகைகள் மூலம் போலி ஆதாா்: 3 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு
ரூ. 25,000-க்கு போலி ஆதாா் அட்டைகளை உருவாக்கிய மோசடியில் ஈடுபட்டதாக 3 போ் மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
ராஜஸ்தானில் பள்ளிக் குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப்படல பதிவைப் பயன்படுத்தி ரூ. 25,000-க்கு போலி ஆதாா் அட்டைகளை உருவாக்கிய மோசடியில் ஈடுபட்டதாக 3 போ் மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: ராஜஸ்தானின் சஞ்சூரில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடா்பு துறையில் பணிபுரியும் மனோகா் லால் என்பவா் போலி ஆதாா் அட்டைகளின் பதிவுகள் குறித்து காவல்துறையினரிடம் புகாா் அளித்தாா். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.
இந்தப் புகாா் தொடா்பான செய்திகள் வெளியானதைத் தொடா்ந்து, ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் ஆதாா் அட்டைகளில் மோசடி நடைபெற்ாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கை, ராஜஸ்தான் அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதி சிபிஐக்கு மாற்றியது.
இந்த மோசடியில் தொடா்புடைய 3 போ் மீது சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவா்கள் தங்கள் வசமிருந்த இ-மித்ரா மற்றும் ஆதாா் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ. 25,000-க்கு போலி ஆதாா் அட்டைகளை உருவாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அவா்கள் உருவாக்கிய சில போலி ஆதாா் அட்டைகளில், பள்ளிக் குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப்படல பதிவுகள் மற்றும் கால் விரல் ரேகைகள் கூட பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது எனத் தெரிவித்தனா்.