தில்லி கலவரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவர் உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூலையாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமர் காலித்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கு உமர் காலித்தின் ஜாமீன் மனு ஏற்கெனவே இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உறவினரின் திருமணத்துக்காக இடைக்கால ஜாமீன் கோரி தில்லி கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் உமர் காலித் மனு அளித்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரை 7 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.