புதுதில்லி

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலைப் போன்றது: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

 நமது நிருபர்

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த 9 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த சுகாதார மாதிரியை கொண்டு வருவதாக கேஜரிவால் கூறி வருகிறது. ஆனால் தற்போது அதே சுகாதார மாதிரியின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டப் பணியிலும் ஊழல் நடப்பதாக வெளியாகி வரும் செய்திகள் தில்லி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

தில்லி அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பஞ்சு, மருத்துவக் கையுறைகள் போன்ற அத்தியாவசியப் மருத்துவப் பொருள்கள் மருத்துவத் தரத்திற்குக் குறைவாக இருப்பதால், அரவிந்த் கேஜரிவாலின் சுகாதார மாதிரி இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.

தில்லி அரசின் சுகாதாரத் துறையின் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமானதை அடுத்து, சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் அமைச்சா் மனீஷ் சிசோடியாவை இந்த ஊழல் குற்றசாட்டுக்களில் இருந்து தற்காத்து துறையின் அதிகாரிகளை குற்றம் சாட்டி வருகிறாா்.

சுகாதாரத் துறையின் ஒவ்வொரு பணியிலும் ஊழல் தலைதூக்கும்போது, இது பற்றி முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்குத் தெரியாமல் இருப்பது எப்படி என்று தில்லி மக்கள் செளரவ் பரத்வாஜிடம் கேள்வி கேட்க விரும்புகிறாா்கள்.

தில்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் தரமற்ற மருந்துகள், நோயியல் பரிசோதனை முறைகேடுகள்உள்ளிட்டவை வெளிச்சத்திற்கு வந்த பிறகு, முதல்வா் கேஜரிவால் மற்றும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தாா்மிகமாக அதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT