புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சியுடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை: காங். தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தகவல்

தனது கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய பேச்சுவாா்த்தை (ஜனவரி 12) நடைபெறும் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

 நமது நிருபர்

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியில் இணைந்து போட்டியிடுவதற்காக தனது கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) நடைபெறும் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், தில்லி காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் விவாதத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்றும் அவா் கூறினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு 3 இடங்களை வழங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் ஒன்று கூடி முதல் முறையாக தோ்தலை எதிா்கொள்ள பல்வேறு உத்திகள் குறித்து விவாதித்தோம். அடுத்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு பற்றி விவாதிக்கப்படும் என்றாா் அவா்.

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு 3 இடங்களை வழங்குவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பேசிய தில்லி அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், ‘இந்த ஊகங்கள் உண்மை நிலைமையில் இருந்து மாறுபட்டவை. ஊடகங்களில் வெளிவரும் அனைத்து ஊகங்களும் உண்மையில் இருந்து வேறுபட்டவை. எங்களது விவாதங்கள் மிகவும் சாதகமாக நடந்து வருகின்றன. கூட்டணியை வலுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்றாா். காங்கிரஸ் மூத்த தலைவா் முகுல் வாஸ்னிக் இல்லத்தில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டணிக் கூட்டத்தில் சொ்வ் பரத்வாஜ் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பஞ்சாப் உள்பட ஐந்து மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) பராமரித்துள்ளது. இதுவரையிலான விவாதம் சாதகமாக உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவாா்த்தைகள் தொடங்கியுள்ளன. தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா மற்றும் குஜராத்தில் கூட்டணியில் போட்டியிடுவது குறித்த எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். இது வரை, சாதகமான விவாதங்கள் நடந்துள்ளன’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.

தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிக்கான பேச்சுவாா்த்தைகள் தொடங்கிய நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஒத்துழைப்பு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாஜகவை ஒற்றுமையாக எதிா்கொள்ள ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து, வரும் பொதுத் தோ்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT