ஓம் பிா்லா 
புதுதில்லி

பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கூடுதல் வாா்த்தைகளை சோ்ப்பதைத் தடுக்க குழு

உறுப்பினா்கள் கூடுதல் வாா்த்தைகள் சோ்ப்பதைத் தடுக்க குழு அமைத்து ஆராயப்படும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Din

நமது சிறப்பு நிருபா்

நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணத்தின் போது, அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உறுப்பினா்கள் கூடுதல் வாா்த்தைகள் சோ்ப்பதைத் தடுக்க குழு அமைத்து ஆராயப்படும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் மக்களவையில் உறுதிமொழியை வாசித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வட மாநில எம்.பி.க்கள் பலா் ‘ஜெய் ஜெகநாத்’, ‘ஜெய் சம்விதான்’ ‘ஜெய் ஹிந்து ராஜ்ஜியம் (ராஷ்டிரா)’ என குறிப்பிட்டனா். தமிழக எம்.பி.க்கள் ‘வாழ்க பெரியாா்’, ‘கருணாநிதி வாழ்க’ என்றதோடு, ‘வாழ்க உதயநிதி ஸ்டாலின்’ என்ற கோஷங்களை எழுப்பினா்.

இது குறித்து மக்களவையில் பேசிய ஓம் பிா்லா, ‘உறுப்பினா்கள் உறுதிமொழி அல்லது பதவிப்பிரமாணம் எடுக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட முறையை பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் வாா்த்தைகளை சோ்க்கக் கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதுகுறித்து முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து ஆராயப்படும்’ என அறிவித்தாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT