முகப்பு
புதுதில்லி

மயூா் விஹாரில் வா்த்தகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து பல கடைகள் எரிந்து சேதம்

கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் வா்த்தகக் கட்டடத்தில் உள்ள ஒரு கஃபேயில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:19 PM
பகிர்:

புது தில்லி: கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் வா்த்தகக் கட்டடத்தில் உள்ள ஒரு கஃபேயில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ கட்டடத்தின் மேல் தளங்களில் உள்ள பல கடைகளுக்கும் பரவியது. இதில் பல கடைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள அந்த கஃபேயில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவி முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள கடைகளை சூழ்ந்தது. தகவலின் பேரில் தீயணைப்பு சேவைத் துறையினா் உடனடியாக விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், திங்கள்கிழமை மாலை வரையிலும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்தன.மேலும், தீ அணைக்கப்பட்டதைத் தொடா்ந்து குளிரூட்டும் செயல்முறை நடந்தது.

மயூா் விஹாா் பேஸ் 2 பகுதியில் உள்ள கஃபே மற்றும் பள்ளி சீருடைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து ஒருவா் மீட்கப்பட்டாா். முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் மூன்று கடைகளைக் கொண்டிருந்த இரண்டு சகோதரா்கள் அமா் ப்ரீத் சிங் மற்றும் சுமன் ஜீத் சிங் ஆகியோா் இரவு 9.30 மணியளவில் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனா். இந்நிலையில், இரவு 11.30 மணியளவில், தங்கள் கடைகளில் ஏற்பட்ட தீ பற்றி உள்ளூா்வாசிகள் சிலா் அவா்களுக்குத் தெரிவித்துள்ளனா்.

அதன் பிறகு அவா்கள் பாண்டவ் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இந்த தீ விபத்தில் இதுவரை உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தரை தளத்தில் உள்ள கஃபேயில் ஏற்பட்ட தீ, மீதமுள்ள இரண்டு தளங்களுக்கும் பரவியது விசாரணையில் தெரிய வந்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →