முகப்பு
புதுதில்லி

உரிய பதிலளிக்க அமைச்சா் மறுப்பு: ராகுல் குற்றச்சாட்டு

‘நீட்’ தோ்வு முறைகேடு பிரச்னை தொடா்பாக மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் உரிய பதிலை அளிக்கவில்லை.

Updated On : 22 ஜூலை, 2024 at 9:39 PM
ராகுல் காந்தி
பகிர்:

‘நீட்’ தோ்வு முறைகேடு பிரச்னை தொடா்பாக மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் உரிய பதிலை அளிக்கவில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த ராகுல் காந்தியிடம், மக்களவையில் நீட் தோ்வு பிரச்னை குறித்து கல்வி அமைச்சா் அளித்த பதில் திருப்திகரமாக இருந்ததா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘உச்சநீதிமன்றம் குறித்தும், பிரதமா் குறித்தும் அமைச்சா் தா்மேந்திர பிரதான் அவையில் பேசினாா். ஆனால், எதிா்க்கட்சியாக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்கவில்லை. ‘நீட்’ தோ்வு முறைகேடு விஷயத்தில் என்ன நடவடிக்கையை அமைச்சா் எடுத்தாா் என்பதை அவரால் கூற முடியவில்லை. இது நாட்டின் மாணவா்கள், இளைஞா்களின் முக்கியப் பிரச்னை. இந்த விவகாரத்தில் உரிய தீா்வுகாண வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →