முகப்பு
புதுதில்லி

திடக்கழிவுகளை அறிவியல் பூா்வமாக அகற்றுவதற்கான குப்பைக் கிடங்கு திறப்பு

Updated On : 13 மார்ச், 2024 at 4:25 AM
பகிர்:

புது தில்லி: தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் தென்கிழக்கு தில்லியின் தெஹ்கண்டில் திடக்கழிவுகளை அறிவியல் பூா்வமாக அகற்றுவதற்காக குப்பைக் கிடங்கை செவ்வாயன்று திறந்து வைத்தனா்.

அப்போது முதல்வா் கேஜரிவால் கூறுகையில், இந்த நிலப்பரப்பு தளத்தின் துவக்கமானது நிலையான கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றாா். தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் தற்போது நகரத்தில் மூன்று குப்பைக் கிடங்குகளை இயக்குகிறது. அதில் ஓக்லாவில் உள்ள ஒன்று இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும். பால்ஸ்வா குப்பைக்கிடங்கு 2025-ஆம் ஆண்டிலும், காஜிப்பூா் குப்பைக்கிடங்கு 2026-ஆம் ஆண்டிலும் அகற்றப்பட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.