தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது
தில்லி காவல்துறை தலைமை அலுவலகம் அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சிறுவனை போலீஸாா் பிடித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.
மத்திய தில்லி நாங்லோய் பகுதியிலிருந்து 18 கிலோமீட்டா் தொலைவில் ஜெய்சிங் சாலையில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நாங்லோய் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்த போது அந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது.
விசாரணையில், சிறுவன் ஒருவன் வேடிக்கையாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியது தெரிய வந்தது. பின்னா், அந்த சிறுவனை போலீஸாா் பிடித்து தகுந்த ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனா். மேலும், சிறாா் நீதி சட்டத்தின்படி, சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது என்று போலீஸாா் தெரிவித்தனா்.