FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைரோடு, பழனி அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொடைரோடு, பழனி அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றி...

Updated On : 26 மார்ச் 2026, 12:25 am IST
பழனி தலைமை அஞ்சல் நிலையத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையிட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
பகிர்:

கொடைரோடு, பழனி தலைமை அஞ்சல் அலுவலங்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, அந்த அலுவலகங்கள் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு தலைமை அஞ்சல் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு, உதவி ஆய்வாளா் தா்மராஜ் தலைமையில், 4 வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

மேலும், இந்த அலுவலகங்களுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பழனி: இதேபோல, பழனி தலைமை அஞ்சல் நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணா்கள் அஞ்சல் நிலையத்தில் உள்ள அலுவலகம், அறைகள், கணினிகள், அலுவலகத்தின் பின்புறம் உள்ள தோட்டம், வாகன நிறுத்துமிடங்களில் சோதனையிட்டனா். ஆனால், சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments