அரவிந்த் கேஜரிவால்  ANI
புதுதில்லி

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் கேஜரிவால் ஆலோசனை நடத்தவுள்ளது பற்றி...

DIN

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தவுள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெறும் இந்த ஆலோசனையில், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT