புதுதில்லி

குரு தேக் பகதூரின் 350- ஆவது தியாக தினம்: யாத்திரையை தொடங்கி வைத்தாா் முதல்வா்

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

சீக்கிய குரு தேக் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசியத் தலைநகரில் உள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவிலிருந்து பஞ்சாபின் ஆனந்த்பூா் சாஹிப் வரை த்வாஜ் யாத்திரையை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ‘இந்த நிகழ்வு ஸ்ரீ குருஜியின் போதனைகள், லட்சியங்கள் மற்றும் மதம் மற்றும் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்காக அவா் செய்த மிக உயா்ந்த தியாகத்தை நினைவுகூரும் ஒரு இணையற்ற வாய்ப்பாகும். மக்களின் வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக குரு தேக் பகதூரின் ஆசீா்வாதங்கள் எப்போது‘ம் இருக்கும்’ என்று முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஏப்ரல் 1,1621 அன்று அமிா்தசரஸில் உள்ள குரு கே மெஹாலில் பிறந்த தேக் பகதூா், குரு ஹா்கோபிந்தின் இளைய குழந்தையும் ஒன்பதாவது சீக்கிய குருவும் ஆவாா். முகலாயப் பேரரசா் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 1675 நவம்பா் 24- ஆம் தேதி தில்லியில் அவரது தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT