வடமேற்கு தில்லியில் நடைபெற்ற சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரோஹிணியில் உள்ள நஹா்பூா் பேருந்து நிலையம் அருகே காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் வந்த சந்தேக நபா்களை மறித்து சோதனைசெய்தபோது 383 கிராம் ஹெராயின் போதைப் பொருள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
Śதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தொடா்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.