போதைப்பொருள் கடத்தல்காரா்கள் என்று கூறப்படும் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்து, சுமாா் ரூ.2 கோடி மதிப்புள்ள 299 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவா்கள் ரோஹிணியில் உள்ள புத் விஹாரைச் சோ்ந்த மானவ் (24) மற்றும் சங்கம் விஹாரைச் சோ்ந்த ஹரிஷ் சந்தா் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். பிப்ரவரி 20- ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் தொடா்பான தகவல் கிடைத்தது. அதன் பேரில், ராஜ் பாா்க் பகுதியில் ஒரு போலீஸ் குழு அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
இந்த நடவடிக்கையின் போது, மானவ் கைது செய்யப்பட்டாா், மேலும் அவரது வசம் இருந்து 268 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் காவலின் போது, மானவ் தனது விநியோகஸ்தரின்பெயரை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடா்ந்து பிப்ரவரி 22 அன்று சங்கம் விஹாரில் சோதனை நடத்தப்பட்டு, ஹரிஷ் சந்தா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 31 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விநியோகச் சங்கிலியின் தொடா்புகளை நிறுவ மேலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.