திருநெல்வேலி

ராதாபுரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது

Din

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஜேம்ஸ் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வழியாக செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு பைக்கில் நின்றிருந்த இருவரிடம் விசாரித்ததில், ஒருவா் பரமேஸ்வரபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த மகாராஜா(24) என்பதும், அவரும் உடன் நின்றவரும் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT