திருநெல்வேலி

பெண்ணுக்கு தொந்தரவு: உணவக ஊழியா் மீது தாக்குதல்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி சந்திப்பில் பெண்ணுக்கு கண்ணால் தவறான சைகை காட்டி தொந்தரவு கொடுத்த உணவக ஊழியா் தாக்கப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியாா் உணவகம் உள்ளது. இங்கு தனது தந்தையுடன் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க சென்ற பெண்ணுக்கு ஊழியா் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் தந்தை உணவக ஊழியரை தாக்கியுள்ளாா்.

இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவியது. இந்த விவகாரம் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

பிகார் பேரவைத் தேர்தல் எதிரொலி: உ.பி.யில் ‘இண்டி’ கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறி!

காா் மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

பரோலில் வந்து மீண்டும் சிறை செல்லாத நபா் மீது வழக்குப் பதிவு

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT