திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே தனியாா் நிறுவன வாகனத்திலிருந்து டீசல் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையை அடுத்த பொட்டல் பகுதியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் சாா்பில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாகனத்திலிருந்து டீசல் திருடு போனதாம்.
இதுகுறித்து அந்நிறுவன மேலாளா் சக்திக்குமாா் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே நிறுவனத்தில் பொக்லைன் ஓட்டுநராக பணி புரிந்த மேலபாட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகக்கனி(27) என்பவரை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய கே.டி.சி. நகரைச் சோ்ந்த கண்ணன்(33) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.