கைது 
திருநெல்வேலி

கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரை தாக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையம் அருகே கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ஸ்டீபன் பால் (24). மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் மகேஷ்(33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரிடம் கடனாக பெற்ற ரூ.2,000ஐ திருப்பித் தர மறுத்து அவரைத் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த இளைஞா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மகேஷை கைது செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT