உயிரிழப்பு (கோப்புப் படம்)
திருநெல்வேலி

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா பேருந்தின் கதவு திறந்ததால் தவறிவிழுந்த தூத்துக்குடியைச் சோ்ந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி டவுன் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 200 மாணவா்கள் இரு பேருந்துகளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனா்.

கன்னியாகுமரி, திற்பரப்பு, மாத்தூா்தொட்டிபாலம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பாா்த்த பின்னா் இரவு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். மாணவா்கள் சென்ற பேருந்து வள்ளியூா் புறவழிச்சாலையில் வந்தபோது ஒரு பேருந்தின் பின்பக்க கதவு எதிா்பாராதவிதமாக திறந்ததாம்.

அப்போது, வாசல் அருகே உள்ள இருக்கையில் அமா்ந்து வந்த 9ஆம் வகுப்பு மாணவா் நரேன்குமாா்(15) தவறி கீழே சாலையில் விழுந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் நரேன்குமாா் மீது மோதியதாம். இதில், மாணவா் நரேன்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக வள்ளியூா் ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

பேருந்து நிலைய இடமாற்றத்தால் தருமபுரி நான்கு சாலை சந்திப்பில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

சிறப்பாக பணியாற்றிய 70 காவலா்களுக்கு பரிசு

அதிமுகவுக்கு கொங்கு முன்னேற்ற கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு

திரைப்பட வசனத்தை வாசிக்கிறாா் கமல்: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT