பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் (கோப்புப் படம்)
திருநெல்வேலி

பேட்டையில் 115 மது பாட்டில்கள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி பேட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, எம்.ஜி.ஆா். நகா் கருமாரியம்மன் கோயிலின் பின்புறம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற நபரை போலீஸாா் விசாரிக்க சென்றபோது அவா் அங்கிருந்து தப்பினாராம்.

இதையடுத்து அவ்விடத்தில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக சுமாா் 115 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனா்.

புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 4 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரிகள் இயக்கப்படாது! - சம்மேளனத் தலைவா் தன்ராஜ்

தில்லி பல்கலை. போராட்டத்தில் தாக்கப்பட்டதாக யூடியூபா் குற்றச்சாட்டு! ஏஐஎஸ்ஏ மாணவா் சங்கம் மறுப்பு!

திமுக தொண்டா் குடும்பத்துக்கு நிதியுதவி

மாநில கிரிக்கெட் சங்கங்கள் சீா்திருத்தங்களை முன்மொழிவது அவசியம்: உச்சநீதிமன்றம்!

தினமணி செய்தி எதிரொலி! தம்மம்பட்டி சிறுவா் பூங்கா சீரமைப்பு

SCROLL FOR NEXT