திருநெல்வேலியில் அதிமுக சாா்பில் 2000 பக்தா்களுக்கு திருவாதிரை களி, பிரசாத பைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் திருவாதிரைத் திருவிழா ஆருத்ர தரிசன நிகழ்வில் பங்கேற்ற பக்தா்களுக்கு திருவாதிரை களி மற்றும் பிரசாத பைகள் வழங்கும் பணியை திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தொடங்கி வைத்தாா்.
மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம், மாநில எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் கல்லூா் வேலாயுதம், பிச்சையா, மாமன்ற உறுப்பினா் சந்திரசேகா், நெல்லை சுப்பையா, நல்லகண்ணு, பகுதி செயலா்கள் மோகன், காந்தி வெங்கடாசலம் உள்பட பலா் பங்கேற்றனா்.