திருநெல்வேலி

பாளை.யில் இளம்பெண் மா்ம மரணம்

பாளையங்கோட்டையில் இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

பாளையங்கோட்டையில் இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாளையங்கோட்டை சாந்தி நகா் 20ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெஃப்ரின் டேவிட்சன். இவா், காா் வாங்கி விற்பனை செய்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவா்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இரு குழந்தைகள் உள்ளனா். ஜெஃப்ரி டேவிட்சன் தொழில் தொடங்க மனைவி பிரியங்காவிடம் அவருடைய குடும்பத்தினரிடம் பணம் கேட்கக் கூறி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி பிரியங்கா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டேவிட்சன் பிரியங்காவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியங்கா, வெள்ளிக்கிழமை இரவில் உயிரிழந்தாா். இதனிடையே பிரியங்கா சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவருடைய உறவினா்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து டேவிட்சனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT