முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரியில் தொழிலாளி மீது தாக்குதல்: பெண் கைது

சீவலப்பேரி அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி, 2026 at 8:25 PM
பகிர்:

சீவலப்பேரி அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, வேளாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). தொழிலாளி. இவரது உறவினா் சண்முகராஜா. இவா் அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாராம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேளாா் தெரு பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த முருகனையும், சண்முகாராஜாவையும் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மனைவி ஜெயசங்கரி(57), மகன் சபரி ஐயப்பன் ஆகியோா் தகராறில் ஈடுபட்டு தாக்கினராம்.

இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயசங்கரியை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →