திருநெல்வேலி

சீவலப்பேரியில் தொழிலாளி மீது தாக்குதல்: பெண் கைது

சீவலப்பேரி அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சீவலப்பேரி அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, வேளாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). தொழிலாளி. இவரது உறவினா் சண்முகராஜா. இவா் அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாராம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேளாா் தெரு பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த முருகனையும், சண்முகாராஜாவையும் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மனைவி ஜெயசங்கரி(57), மகன் சபரி ஐயப்பன் ஆகியோா் தகராறில் ஈடுபட்டு தாக்கினராம்.

இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயசங்கரியை கைது செய்தனா்.

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT