முகப்பு
கன்னியாகுமரி

மகாராஜபுரத்தில் உழவர் திருவிழா

  மகாராஜபுரம் ஊராட்சியில் உழவர் திருவிழா, பாரம்பரிய வேளாண் பொருள்கள் பயன்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 13 மே 2013, 1:55 am IST
பகிர்:

  மகாராஜபுரம் ஊராட்சியில் உழவர் திருவிழா, பாரம்பரிய வேளாண் பொருள்கள் பயன்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

 விழாவில் 150 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகளை அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சாந்தி இசக்கிமுத்து வழங்கினார்.

 கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநர் முருகேசன் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சுசீலா, கால்நடை உதவி மருத்துவர் வெங்கடேசன், உதவிப் பொறியாளர் பாலகிருஷ்ணன், வேளாண் அலுவலர்கள் மோகன், கிருஷ்ணகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாலமுருகன், வித்யாசாகர், வனஜா, பசுங்கொடி, கிருபாராணி, தொழில்நுட்ப வல்லுநர்கள் அருண், ஷீலா, அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இ. சுப்பையா, கன்னியாகுமரி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கே. இசக்கிமுத்து, மகாராஜபுரம் ஊராட்சித் தலைவி எஸ். ஆனந்தபாய், முரளி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.