கன்னியாகுமரி

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கைது

DIN

நாகர்கோவிலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக  ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ராஜசுலோச்சனா தலைமையிலான போலீஸார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் நாகர்கோவில் செட்டித் தெருவைச் சேர்ந்த நடேசன் (48) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT