நடைக்காவில் நேசமணி சிலைக்கு காங்கிரஸ் மரியாதை
தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தையொட்டி, நடைக்காவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு
கன்னியாகுமரிநடைக்காவில் நேசமணி சிலைக்கு காங்கிரஸ் மரியாதை
தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தையொட்டி, நடைக்காவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு
தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தையொட்டி, நடைக்காவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
குமரி மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆர்.ஆமோஸ் தலைமை வகித்து, நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், கட்சியின் துணைத் தலைவர் பால்மணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், முன்சிறை வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தென்மண்டல பொறுப்பாளர் ஆஸ்கர் பிரடி, வர்த்தகர் பிரிவு துணைத் தலைவர் ஆபிரகாம், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெ. ஜார்ஜ், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.