ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலர் ராஜாசிங் ஆகியோர் குமரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமைஅளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்தவேண்டும். மருத்துவ உதவி, புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியர்களுக்கு வருகிற ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 2022 ஜூன் 30 ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீடு ரூ. 5 லட்சமாகவும், கேன்சர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 7.5 லட்சமாகவும் உயர்த்தவேண்டும். மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு முழுமையான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் பேக்கேஜ் முறை ஒழிக்கப்படவேண்டும். நோய்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கான பட்டியலுக்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்றில்லாமல், அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.