தக்கலையில் சமக ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தக்கலை அஞ்சல் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தக்கலை அஞ்சல் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டச் செயலர் வழக்குரைஞர் என். சுரேஷ் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குளோறி பெல்லட் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மோகன்தாஸ், மாவட்ட துணைச் செயலர்அப்துல்காதர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.ஆர். குமார், முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.