குமரி மாவட்டத்துக்கு கனிமொழி எம்.பி. இன்று வருகை
திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை (மே 1) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார்.
திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை (மே 1) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார்.
இதுகுறித்து, குமரி கிழக்கு மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்காக மே 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் மாவட்ட திமுக சார்பில் எனது(சுரேஷ்ராஜன்) தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறும் திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
மே 2ஆம் தேதி காலை 10 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்துப் பேசுகிறார். மாலை 6 மணிக்கு சுசீந்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்நிகழ்ச்சிகளில் திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகரச் செயலர்கள்,துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.