முகப்பு
கன்னியாகுமரி

பெருமாள்புரத்தில் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு

கொட்டாரத்தை அடுத்த பெருமாள்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

கொட்டாரத்தை அடுத்த பெருமாள்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இம்மாதம் 11ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருமாள்புரத்தில் இயங்கிவரும் அரோவ் பயிற்சி மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது. 
குமாரசுவாமி நலவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்வை டாக்டர் ஞானசெளந்தரி தொடங்கிவைத்தார். பயிற்சி மைய இயக்குநர் பேராசிரியர் கருணாகரன்,  ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

முழு கட்டுரையைப் படிக்க →