முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீரின் வேகம் தணிந்து மிதமாகக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:43 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீரின் வேகம் தணிந்து மிதமாகக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்து, அவ்வப்போது லேசான சாரலுடன் இதமான காலநிலை நிலவுகிறது. மழையின் தீவிரம் தணிந்துள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைந்துள்ளது.
திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றிலும் தண்ணீரின் வேகம் குறைந்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.