முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.

Updated On : 22 மே, 2018 at 12:35 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது குறித்து குமரி மாவட்ட மக்கள் பீதி அடைய வேண்டாம். மாவட்டத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.