கன்னியாகுமரி

கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி கூர்க்கா சாவு

DIN

கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்கா உயிரிழந்தார்.
நேபாள நாட்டை சேர்ந்தவர் கும்பராஜ் பந்தியா (32), இவர், கருங்கல் பகுதியில் தங்கியிருந்து காவல் பணி செய்து வந்தார். கரந்தவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை குளித்து விட்டு வருவதாக கூறி, வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், குளத்தின் கரையில் கிடந்த உடமைகள் மூலம் நீரில் மூழ்கி இறந்தது கூர்க்கா கும்பராஜ் பந்தியா என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT