முள்ளஞ்சேரியில் நூல் ஆய்வரங்கம்
குமரி அறிவியல் பேரவையின் நூல் ஆய்வரங்கம் மார்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.
குமரி அறிவியல் பேரவையின் நூல் ஆய்வரங்கம் மார்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார். பேராசிரியர் சஜீவ், கேப்டன் பென்னட்சிங், ரமேஷ், தீபா ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.
இதில், வாஜ்பாய் பத்வேஷ்வர் முதல் பிரதமர் அலுவலகம் வரை என்ற நூலை கீர்த்தனா ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு நூல்களை இளம்விஞ்ஞானி மாணவியர் செளமியா, சிவநந்து, ஸ்ரேயா, காயத்திரி, லெட்சுமி, ஆன்சிகா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பேசினர்.